பாடல் 83 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் -
தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் ...... தனதான |
பெருக்கச்சஞ் சலித்துக்கந் தலுற்றுப்புந் தியற்றுப்பின் பிழைப்பற்றுங் குறைப்புற்றும் ...... பொதுமாதர் ப்ரியப்பட்டங் கழைத்துத்தங் கலைக்குட்டங் கிடப்பட்சம் பிணித்துத்தந் தனத்தைத்தந் ...... தணையாதே புரக்கைக்குன் பதத்தைத்தந் தெனக்குத்தொண் டுறப்பற்றும் புலத்துக்கண் செழிக்கச்செந் ...... தமிழ்பாடும் புலப்பட்டங் கொடுத்தற்கும் கருத்திற்கண் படக்கிட்டும் புகழ்ச்சிக்குங் க்ருபைச்சித்தம் ...... புரிவாயே தருக்கிக்கண் களிக்கத்தெண் டனிட்டுத்தண் புனத்திற்செங் குறத்திக்கன் புறச்சித்தந் ...... தளர்வோனே சலிப்புற்றங் குரத்திற்சம் ப்ரமித்துக்கொண் டலைத்துத்தன் சமர்த்திற்சங் கரிக்கத்தண் ...... டியசூரன் சிரத்தைச்சென் றறுத்துப்பந் தடித்துத்திண் குவட்டைக்கண் டிடித்துச்செந் திலிற்புக்கங் ...... குறைவோனே சிறக்கற்கஞ் செழுத்தத்தந் திருச்சிற்றம் பலத்தத்தன் செவிக்குப்பண் புறச்செப்பும் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 83 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தத்தந், செய்து, ஞானக், மனம், அங்கு, தந்து, கொண்டு, பெருமாளே, நான், இல்லாமல், அன்பு, தங்களுடைய