பாடல் 447 - திருக்காளத்தி - திருப்புகழ்

ராகம் -
கானடா; தாளம் - சதுஸ்ர ஜம்பை - 7
- எடுப்பு - அதீதம், - விச்சில் 1/2 இடம்
- எடுப்பு - அதீதம், - விச்சில் 1/2 இடம்
தனத்தா தத்தத் ...... தனதான தனத்தா தத்தத் ...... தனதான |
சிரத்தா னத்திற் ...... பணியாதே செகத்தோர் பற்றைக் ...... குறியாதே வருத்தா மற்றொப் ...... பிலதான மலர்த்தாள் வைத்தெத் ...... தனையாள்வாய் நிருத்தா கர்த்தத் ...... துவநேசா நினைத்தார் சித்தத் ...... துறைவோனே திருத்தாள் முத்தர்க் ...... கருள்வோனே திருக்கா ளத்திப் ...... பெருமாளே. |
தலையைக் கொண்டு உன்னைப் பணியாமல் இருக்கும் யான் உலகத்தோர்தம் பாசங்களில் நோக்கம் செலுத்தாமல் இருக்கும்படியாக என்னை வருத்தி, தமக்கு வேறு நிகர் இல்லாத மலர் போன்ற உன் திருவடிகளில் சேர்த்து, ஏமாற்றுக்காரனாகிய என்னை ஆண்டருள்வாயாக. நடனம் ஆட வல்லவனே, தலைமை ஸ்தானம் வகிக்கும் நேசனே, உன்னை நினைப்பவர்களது சித்தத்தில் வீற்றிருப்பவனே, உன் திருவடிகளை ஜீவன் முக்தர்களுக்கு* தந்தருள்பவனே, திருக்காளத்தியில் உள்ள பெருமாளே.
* ஜீவன் முக்தர்கள் நான்கு வகைப்படுவர்:பிரம்ம வித்துக்கள் - ஞானம் அடைந்து உலகத்திற்காக உழைப்பவர்கள்,பிரம்ம வரர் - சமாதிநிலையில் இருந்து தாமே உணரும் ஞானிகள்,பிரம்ம வரியர் - சமாதியில் இருந்து பிறர் கலைக்க எழும் ஞானிகள்,பிரம்ம வரிஷ்டர் - சமாதியில் இருந்து கலைக்கப்பட முடியாத ஞானிகள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 447 - திருக்காளத்தி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பிரம்ம, இருந்து, ஞானிகள், சமாதியில், ஜீவன், என்னை, தத்தத், தனதான, பெருமாளே, தனத்தா