பாடல் 40 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - ஆனந்த பைரவி
- மத்யம ஸ்ருதி; தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தாதக-2, தகதிமி-2, தகதிமி-2
தகிட-1 1/2, தாதக-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தானன தந்தன தந்தன தனன தானன தந்தன தந்தன தனன தானன தந்தன தந்தன ...... தனதான |
கமல மாதுடன் இந்திரை யுஞ்சரி சொலவொ ணாதம டந்தையர் சந்தன களப சீதள கொங்கையில் அங்கையில் ...... இருபோதேய் களவு நூல்தெரி வஞ்சனை அஞ்சன விழியின் மோகித கந்தசு கந்தரு கரிய ஓதியில் இந்துமு கந்தனில் ...... மருளாதே அமல மாகிய சிந்தைய டைந்தகல் தொலைவி லாதஅ றம்பொருள் இன்பமும் அடைய ஓதியு ணர்ந்துத ணந்தபின் ...... அருள்தானே அறியு மாறுபெ றும்படி அன்பினின் இனிய நாதசி லம்புபு லம்பிடும் அருண ஆடக கிண்கிணி தங்கிய ...... அடிதாராய் குமரி காளிப யங்கரி சங்கரி கவுரி நீலிப ரம்பரை அம்பிகை குடிலை யோகினி சண்டினி குண்டலி ...... எமதாயி குறைவி லாள்உமை மந்தரி அந்தரி வெகுவி தாகம சுந்தரி தந்தருள் குமர மூஷிக முந்திய ஐங்கர ...... கணராயன் மமவி நாயகன் நஞ்சுமிழ் கஞ்சுகி அணிக ஜானன விம்பனொர் அம்புலி மவுலி யானுறு சிந்தையு கந்தருள் ...... இளையோனே வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும் இடைவி டாதுநெ ருங்கிய மங்கல மகிமை மாநகர் செந்திலில் வந்துறை ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 40 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தன, ஆகிய, தானன, கரிய, தருபவளும், எங்கள், பெருமாளே, மூஷிக, வஞ்சனை, தகதிமி, மஞ்சளும், இஞ்சியும்