பாடல் 395 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தானதனத் தானதனத் தானதனத் தானதனத் தானதனத் தானதனத் ...... தனதானா |
ஆனைவரிக் கோடிளநிர்ப் பாரமுலைச் சாரசைபட் டாடைமறைத் தாடுமலர்க் ...... குழலார்கள் ஆரவடத் தோடலையப் பேசிநகைத் தாசைபொருட் டாரையுமெத் தாகமயக் ...... கிடுமோகர் சோனைமழைப் பாரவிழித் தோகைமயிற் சாதியர்கைத் தூதுவிடுத் தேபொருளைப் ...... பறிமாதர் தோதகமுற் றேழ்நரகிற் சேருமழற் காயனையுட் சோதியொளிப் பாதமளித் ...... தருள்வாயே தானதனத் தீதிமிலைப் பேரிகைகொட் டாசமலைச் சாயகடற் சூரைவதைத் ...... திடுவோனே தாளவியற் சோதிநிறக் காலினெழக் கோலியெடுத் தாபரம்வைத் தாடுபவர்க் ...... கொருசேயே தேனிரசக் கோவையிதழ்ப் பூவைகுறப் பாவைதனத் தேயுருகிச் சேருமணிக் ...... கதிர்வேலா சீரருணைக் கோபுரமுற் றானபுனத் தோகையுமெய்த் தேவமகட் கோர்கருணைப் ...... பெருமாளே. |
* ஏழு நரகங்கள் பின்வருமாறு:கூடாசலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து (பிங்கலம்).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 395 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதனத், அழகிய, உள்ள, ஒப்பற்ற, கொண்ட, பட்டு, பெருமாளே