பாடல் 289 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
- .......
தனத்தன தானம் தனத்தன தானம் தனத்தன தானம் ...... தனதான |
மருக்குல மேவுங் குழற்கனி வாய்வெண் மதிப்பிள வாகும் ...... நுதலார்தம் மயக்கினி லேநண் புறப்படு வேனுன் மலர்க்கழல் பாடுந் ...... திறநாடாத் தருக்கனு தாரந் துணுக்கிலி லோபன் சமத்தறி யாவன் ...... பிலிமூகன் தலத்தினி லேவந் துறப்பணி யாதன் தனக்கினி யார்தஞ் ...... சபைதாராய் குருக்குல ராஜன் தனக்கொரு தூதன் குறட்பெல மாயன் ...... நவநீதங் குறித்தயில் நேயன் திருப்பயில் மார்பன் குணத்ரய நாதன் ...... மருகோனே திருக்குள நாளும் பலத்திசை மூசும் சிறப்பது றாஎண் ...... டிசையோடும் திரைக்கடல் சூழும் புவிக்குயி ராகுந் திருத்தணி மேவும் ...... பெருமாளே. |
* தணிகை மலை அடிவாரத்தில் சரவணப் பொய்கை உள்ளது. இது குமாரதீர்த்தம் எனவும் பெயர் பெறும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 289 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தன, தானம், திருக், சென்றவன், அடியார்கள், குணம், மார்பன், பெருமாளே, இல்லாதவன்