பாடல் 159 - பழநி - திருப்புகழ்

ராகம் - ஹம்ஸநாதம்; தாளம் -
ஆதி
தான தனதனன தான தனதனன தான தனதனன ...... தனதான |
சீற லசடன்வினை காரன் முறைமையிலி தீமை புரிகபடி ...... பவநோயே தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை சீர்மை சிறிதுமிலி ...... எவரோடுங் கூறு மொழியதுபொய் யான கொடுமையுள கோள னறிவிலியு ...... னடிபேணாக் கூள னெனினுமெனை நீயு னடியரொடு கூடும் வகைமையருள் ...... புரிவாயே மாறு படுமவுணர் மாள அமர்பொருது வாகை யுளமவுலி ...... புனைவோனே மாக முகடதிர வீ சு சிறைமயிலை வாசி யெனவுடைய ...... முருகோனே வீறு கலிசைவரு சேவ கனதிதய மேவு மொருபெருமை ...... யுடையோனே வீரை யுறைகுமர தீர தரபழநி வேல இமையவர்கள் ...... பெருமாளே. |
* மனிதர்களைப் புகழ்ந்து பாடாத அருணகிரிநாதர் அபூர்வமாகப் பாடிய சிலரில் கலிசைச் சேவகனார் ஒருவர்.இவர் அருணகிரியாரின் நண்பர், முருக பக்தர், வீரைத் தலத்தில் பழநி ஆண்டவரை எழுந்தருளப் புரிந்தவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 159 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, நீதி, பெருமை, உடையவனே, உடைய, பெருமாளே, இல்லாதவன்