பாடல் 1302 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
ராமப்ரியா
தாளம் - திஸ்ர ஏகம் - 3
தாளம் - திஸ்ர ஏகம் - 3
தனனத்த தத்த ...... தனதான |
மனைமக்கள் சுற்ற ...... மெனுமாயா வலையைக்க டக்க ...... அறியாதே வினையிற்செ ருக்கி ...... யடிநாயேன் விழலுக்கி றைத்து ...... விடலாமோ சுனையைக்க லக்கி ...... விளையாடு சொருபக்கு றத்தி ...... மணவாளா தினநற்ச ரித்ர ...... முளதேவர் சிறைவெட்டிவிட்ட ...... பெருமாளே. |
மனைவி, மக்கள், உறவினர் என்ற மாய வலையைவிட்டு வெளியேறத் தெரியாமல், என் வினைகளிலே மகிழ்ச்சியும் கர்வமும் அடைந்த நாயினும் கீழான அடியேன், வீணுக்குப் பயனில்லாமல் என் வாழ்நாளைக் கழித்திடுதல் நன்றோ? சுனைக்குள் புகுந்து அதனைக் கலக்கி விளையாடும் வடிவழகி வள்ளி என்ற குறத்தியின் மணவாளனே, நாள்தோறும் நல்ல வழியிலேயே செல்லும் தேவர்களின் சிறையை நீக்கி அவர்களை மீட்ட பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1302 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமாளே