பாடல் 1056 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனன தனன தாத்தன, தனன தனன தாத்தன தனன தனன தாத்தன ...... தனதான |
மகளு மனைவி தாய்க்குல மணையு மனைவர் வாக்கினில் மறுகி புறமு மார்த்திட ...... வுடலூடே மருவு முயிரை நோக்கமு மெரியை யுமிழ ஆர்ப்பவ ருடனு மியமன் மாட்டிட ...... அணுகாமுன் உகமு முடிவு மாச்செலு முதய மதியி னோட்டமு முளது மிலது மாச்சென ...... வுறைவோரும் உருகு முரிமை காட்டிய முருக னெனவு நாக்கொடு உனது கழல்கள் போற்றிட ...... அருள்தாராய் புகல வரிய போர்ச்சிலை விரக விசைய னாற்புக ழுடைய திருத ராட்டிர ...... புதல்வோர்தம் புரவி கரிகள் தேர்ப்படை மடிய அரசை மாய்த்துயர் புவியின் விதன மாற்றினர் ...... மருகோனே மிகவு மலையு மாக்கடல் முழுது மடிய வேற்றுரு வெனவு மருவி வேற்கொடு ...... பொருசூரன் விரைசெய் நெடிய தோட்கன அடலு முருவ வேற்படை விசைய முறவும் வீக்கிய ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1056 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தாத்தன, கொண்டு, பெரிய, செய்து, வரும், வந்து, மடிய, மனைவி, முடிவு, உனது, விசைய, பெருமாளே