பாடல் 1046 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான |
அயிலின் வாளி வேல்வாளி அளவு கூரி தாயீச ரமுத ளாவு மாவேச ...... மதுபோல அறவு நீளி தாய்மீள அகலி தாய வார்காதி னளவு மோடி நீடோதி ...... நிழலாறித் துயில்கொ ளாத வானோரு மயல்கொ ளாத ஆவேத துறவ ரான பேர்யாரு ...... மடலேறத் துணியு மாறு லாநீல நயன மாத ராரோடு துவளு வேனை யீடேறு ...... நெறிபாராய் பயிலு மேக நீகார சயில ராசன் வாழ்வான பவதி யாம ளாவாமை ...... அபிராமி பரிபு ரார பாதார சரணி சாம ளாகார பரம யோகி னீமோகி ...... மகமாயி கயிலை யாள ரோர்பாதி கடவு ளாளி லோகாயி கனத னாச லாபார ...... அமுதூறல் கமழு மார ணாகீத கவிதை வாண வேல்வீர கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே. |
* மடல் ஏறுதல்: காமத்தால் வாடும் தலைவன் பனங்கருக்கால் குதிரை முதலிய வடிவங்கள் செய்து அவற்றின் மேலே ஏறி ஊரைச் சுற்றி, தலைவியிடம் உள்ள தன் காதலை ஊரிலுள்ள பிறருக்குத் தெரிவிப்பான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1046 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானான, பச்சை, உடையவள், உள்ளவள், உள்ள, பார்வதி, கூர்மை, அளவு, கருணை, பெருமாளே, கண்களை