மயில் விருத்தம் - 3 - மயில் விருத்தம்
சாரங்கா - கண்டசாபு
ஆதார பாதளம் பெயர அடி பெயர மு தண்ட முகடது பெயரவே ஆடரவ முடிபெயர எண்டிசைகள் பெயர எறி கவுட்கிரி சரம் பெயரவே வேதாள தாளங்களுக் கிசைய ஆடுவார் மிக்க ப்ரியப்பட விடா விழிபவுரி கவுரி கண்ட் உளமகிழ விளையாடும் விச்தார நிர்த்த மயிலாம் மாதானு பங்கியெனு மாலது சகோதரி மகீதரி கிராத குலிமா மறைமுனி குமாரி சாரங்கனன் தனிவந்த வள்ளிமணி ஞூபுர மலர் பாதார விந்த சேகரனேய மலரும் உற் பலகிரி அமர்ந்த பெருமாள் படைனிருதர் கடகம் உடைபட நடவு பச்சைப் பசுந்தோகை வாகை மயிலே (பசுந்தோகை வாகை மயிலே |
இப்பூவுலகுக்கெல்லாம் ஆதாரமாய் உள்ள, பாதாள லோகம் அசையவும், மயில் தனது அடியை எடுத்து வைத்த உடனேயே, மிகவும் பழமையான பிரமாண்டத்தின் உச்சிக் கூரையானது அசைவு பெறவும், இப்பூவுலகத்தைத் தாங்கும் ஆதிசேடனின் ஆடுகின்ற ஆயிரம் முடிகளும் அசைந்து கொடுக்கவும், எட்டுத் திக்குகளும் நடுக்கமுறவும், மத நீரை சிந்தி எறிகின்ற கன்னங்களை உடைய அஷ்ட திக்கு கஜங்களும் (யானைகளும்) இடம் பெயரவும், வேதாள கணங்கள் தாளம் போட அதற்குத் தகுந்த வகையில் நடனமாடும் நடராஜப் பெருமான், மிகவும் அன்புடன் பாராட்டவும், வைத்த கண்களை அகற்றாதபடி மயிலின் நடனத்தைக் கண்ட பார்வதி தேவி, உள்ளத்தில் களிப்புகொள்ளவும், பலவிதமான நடன வகைகளைக் காட்டி விளையாடுகின்ற மயில் (அது யாருடையது என வினாவினால்) திருவள்ளுவர் என பெருமை மிக்கவரின் சகோதரியானவள், மலையில் பிறந்தவள், வேடர் வம்சத்தில் வளர்ந்தவள், சிறந்த வேதங்களில் வல்லவராகிய சிவ முனிவரின் புத்திரி, மான் வயிற்றில், ஒப்பற்ற வகையில் உதித்த, நமது வள்ளித் தாயரின், கிண்கிணிகளும் சிலம்பும் அணிந்துள்ள தாமரை மலர் போன்ற, பாதங்களை திருவடியில் அணிந்த முருகனின், அன்பிற்கு உகந்ததாய், பூத்திருக்கும், நீலோற்பல புஷ்பங்கள் நிறைந்த திருத்தணியில், வீற்றிருக்கும் பெருமையை உடையவன், படையுடன் வந்த அசுரர்களின், சேனைகள் சிதறிப் போகும்படி, நடத்துகின்ற, பச்சை நிறமான தோகையை உடைய வெற்றி மயிலே அது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
3 - மயில் விருத்தம், Mayil Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மயிலே, வாகை, பசுந்தோகை, பெயர, மிகவும், உடைய, வகையில், வைத்த, மயில், வேதாள, பெயரவே, பச்சை, மலர்