இந்திய தேசிய இயக்கம் (1917 - 1947)
இரண்டாம் உலகப்போரின்போது இந்தியர் களின் ஆதரவைப் பெறுவதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் 1940 ஆகஸ்ட் 8 ஆம் நாள் 'ஆகஸ்டு சலுகை'யை அறிவித்தது. போருக்குப்பின் புதிய அரசியல் அமைப்பை வரைவதற்காக இந்தியப் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. காந்தி இதனை ஏற்க மறுத்து, தனி நபர் சத்யாகிரகத்தை தொடங்க முடிவு செய்தார்.
வினோபா பாவே |
தனி நபர் சத்யாகிரகம் என்பது வன்முறையற்ற, குறைந்த அளவில், ஒரு அடையாளமாக நடத்தப்பட்ட இயக்கமாகும். சத்யாகிரகத்தில் ஈடுபடுபவர்களை காந்தியே தேர்வு செய்தார். முதலில் தனிநபர் சத்யாகிரகத்தில் ஈடுபட்டவர் ஆசார்ய வினோபா பாவே ஆவார். அவருக்கு மூன்று மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அடுத்து ஜவஹர்லால் நேரு தனி நபர் சத்யாகிரகத்தில் ஈடுபட்டு 4 மாத சிறை தண்டனை பெற்றார். தனி நபர் சத்யாகிரகம் 15 மாதங்கள் நீடித்தது.
கிரிப்ஸ் தூதுக்குழு (1942)
சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ் |
கிரிப்ஸின் முக்கிய பரிந்துரைகள் :
- இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப்படும்.
- சிறுபான்மையினர் பாதுகாப்பு, சுதேச அரசுகள் மற்றும் பிரிட்டிஷ் இந்திய மாகாணங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு அரசியலமைப்புக்குழு ஏற்படுத்தப்படும்.
- பிரிட்டிஷ் இந்தியாவிலுள்ள எந்த மாகாணமாவது இந்த அரசியலமைப்பை ஏற்க மறுக்கும் பட்சத்தில் தற்போதைய நிலையில் தொடரவோ அல்லது தங்களுக்கென தனி அரசியலமைப்பை வரைந்து கொள்ளவோ அனுமதிக்கப்படும்.
கிரிப்சின் யோசனைகளை நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஏற்கவில்லை. காந்தி கிரிப்சின் யோசனைகளை 'பின் தேதியிட்ட காசோலை' என்று வர்ணித்தார். சுதேச அரசுகள் விரும்பினால் அரசியலமைப்பு குழுவிற்கு தனது பிரதிநிதிகளை அனுப்பலாம் அல்லது இந்திய ஒன்றியத்திலிருந்து விலகியே இருக்கலாம் என்ற யோசனையை அரசியல் கட்சிகள் ஏற்கவில்லை. பாகிஸ்தான் கோரிக்கை ஏற்கப்படாததால் முஸ்லிம் லீக் இதனை நிராகரித்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய தேசிய இயக்கம் (1917 - 1947) , இந்திய, வரலாறு, நபர், பிரிட்டிஷ், சத்யாகிரகத்தில், கிரிப்ஸ், அரசியல், இயக்கம், சத்யாகிரகம், தேசிய, இந்தியாவிற்கு, தனது, ஸ்டாபோர்டு, சுதேச, அரசியலமைப்பை, யோசனைகளை, கட்சிகள், ஏற்கவில்லை, கிரிப்சின், அல்லது, அரசுகள், ஏற்க, பிரதிநிதிகளைக், கொண்ட, நாள், அரசாங்கம், இந்தியா, ஏற்படுத்தப்படும், காந்தி, பாவே, வினோபா, செய்தார், இதனை, தண்டனை