இந்திய தேசிய இயக்கம் (1917 - 1947)
- நிலையாக டொமினியன் அந்தஸ்து வழங்கப்படுதல்
- மத்தியில் முழுப் பொறுப்பு வாய்ந்த அரசு
- மாகாணங்களுக்கு சுயாட்சி
- மத்திய மாகாண அரசுகளுக்கிடையே தெளிவான அதிகாரப்பகிர்வு.
- மத்தியில் இரண்டு அவைகள் கொண்ட சட்டமன்றம்
முஸ்லிம் லீக் தலைவரான முகமது அலி ஜின்னா, நேரு அறிக்கை முஸ்லிம் மக்களின் நலனுக்கு எதிரானது என்று கருதினார். அகில இந்திய முஸ்லீம்கள் மாநாட்டை கூட்டிய ஜின்னா, தனது பதினான்கு அம்ச கோரிக்கைகளை வெளியிட்டார்.
சட்ட மறுப்பு இயக்கம்
சலசலப்பான இந்த சூழ்நிலையில் 1929 டிசம்பர் மாதம் லாகூர் காங்கிரஸ் மாநாடு கூடியது. ஜவஹர்லால் நேரு இந்த மாநாட்டுக்கு தலைமை வகித்தார். 'பூரண சுயராஜ்யம்' அல்லது 'முழுச் சுதந்திரம்' குறித்த தீர்மானம் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. நேரு அறிக்கையை அரசு ஏற்க மறுத்தமையால், காங்கிரஸ் சட்ட மறுப்பு இயக்கத்தை தொடங்குவது என முடிவு செய்தது. 1930 ஜனவரி 26 ஆம் நாள் இந்திய சுதந்திர தினமாக அனுசரிக்கப்பட்டது. அது முதல் ஜனவரி 26 ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினமாக அனுசரிக்கப்பட்டது. விடுதலைக்குப்பின் 1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த தினமான ஜனவரி 26 ஆம் நாள் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய தேசிய இயக்கம் (1917 - 1947) , இந்திய, வரலாறு, நேரு, இயக்கம், நாள், தினமாக, ஜனவரி, தேசிய, காங்கிரஸ், சுதந்திர, அனுசரிக்கப்பட்டது, மறுப்பு, முஸ்லிம், அறிக்கை, இந்தியா, மத்தியில், அரசு, ஜின்னா, சட்ட