இந்திய தேசிய இயக்கம் (1917 - 1947)
1919 ஆம் ஆண்டு சட்டம் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அதன் செயல்பாடுகள் மறு ஆய்வு செய்யப்படவேண்டும் என்று விதித்திருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, 1927 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் மறு ஆய்வுக்குழு ஒன்றை நியமித்தது. இக்குழுவின் தலைவரான சர் ஜான் சைமன் என்பவரது பெயராலேயே 'சைமன் குழு' என்று இது அழைக்கப்பட்டது. இதில் இடம்பெற்றிருந்த ஏழு உறுப்பினர்களும் ஆங்கிலேயர்களாவர். இதில் ஒரு இந்திய உறுப்பினர்கூட இடம் பெறாமையால், இந்தியாவுக்கு வந்தடையும் முன்பே இக்குழுவிற்கு பலத்த எதிர்ப்புகள் தோன்றின. காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் இக்குழுவை எதிர்த்தன.
சைமன் குழு எதிர்ப்புகள் |
1930 மே மாதம் சைமன் குழு அறிக்கை வெளியிடப்பட்டது. இரட்டையாட்சியின் குறைபாடுகளை இது சுட்டிக்காட்டியது. அதற்குப்பதில் மாநில சுயாட்சியை இக்குழு பரிந்துரைத்தது. 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்திற்கு இக்குழுவின் அறிக்கை அடிப்படையாக விளங்கியது என்பதில் ஐயமில்லை.
நேரு அறிக்கை
இதற்கிடையில் இங்கிலாந்தின் அயலுறவுச் செயலாளர் பிர்கன் ஹெட் பிரபு அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க முடியுமா என்று கேட்டு இந்தியர்களுக்கு சவால் விடுத்தார். இந்த சவாலை ஏற்ற காங்கிரஸ் 1928 பிப்ரவரி 28ல் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியது. எதிர்கால இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் ஒன்றை வரைவதற்கு எட்டு பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைவராக மோதிலால் நேரு நியமிக்கப்பட்டார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய தேசிய இயக்கம் (1917 - 1947) , இந்திய, சைமன், வரலாறு, குழு, ஆண்டு, தேசிய, இயக்கம், அறிக்கை, இக்குழு, பிப்ரவரி, நாள், மாதம், இக்குழுவை, நேரு, லஜபதிராய், ஒன்றை, சட்டம், இந்தியா, இந்தியாவின், முன்பே, இக்குழுவின், எதிர்ப்புகள், இதில், காங்கிரஸ்