குறுந்தொகை - 180. பாலை - தோழி கூற்று
(தலைவனது பிரிவினால் வருந்திய தலைவியை நோக்கி, “அவர்சென்ற விடத்தில் தாம் கருதிச் சென்ற பொருளைப் பெற்றனரோ; இலரோ;பெற்றனராயின் உடனே மீண்டு வருவார்” என்று தோழி கூறிவற்புறுத்தியது.)
பழூஉப்பல் அன்ன பருவுகிர்ப் பாவடி இருங்களிற் றினநிரை யேந்தல் வரின்மாய்ந் தறைமடி கரும்பின் கண்ணிடை யன்ன பைத லொருகழை நீடிய சுரனிறந்து எய்தினர் கொல்லோ பொருளே யல்குல் |
5 |
அவ்வரி வாடத் துறந்தோர் வன்ப ராகத்தாஞ் சென்ற நாட்டே. |
|
- கச்சிப்பேட்டு நன்னாகையார். |
அல்குல்! அழகிய தேமல்வாடும்படி நம்மைப் பிரிந்த தலைவர் பேயின் பற்களைப் போன்ற பருத்த நகங்களை யுடைய பரவிய அடிகளைப்பெற்ற பெரியகளிற்றுத் திரளின் வரிசையினது தலைவன் வந்து கைக்கொள்ளின் அழிந்து பாத்தியின்கண் வீழ்ந்த கரும்புகளின் கணுக்களின் இடையே யுள்ள பகுதியைப் போன்ற வருந்துதலையுடைய ஒற்றைமூங்கில் ஓங்கிய பாலைநிலத்தைக் கடந்து வன்னெஞ்சினராக தாம் போனநாட்டினிடத்து பொருளைஅடைந்தாரோ இல்லையோ?
முடிபு: துறந்தோர் பொருள் எய்தினர் கொல்லோ?
கருத்து: தலைவர்தாம் தேடிச் சென்ற பொருளைப் பெற்றாரோ,இலரோ?
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 180. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், சென்ற, கூற்று, குறுந்தொகை, பாலை, எய்தினர், கொல்லோ, துறந்தோர், இலரோ, தாம், எட்டுத்தொகை, சங்க, பொருளைப்