அகநானூறு - 105 . பாலை
அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை ஒள் இலைத் தொடலை தைஇ, மெல்லென நல் வரை நாடன் தற்பாராட்ட யாங்கு வல்லுநள்கொல் தானே தேம் பெய்து, மணி செய் மண்டை தீம் பால் ஏந்தி, |
5 |
ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள், நிழற் கயத்தன்ன நீள் நகர் வரைப்பின் எம்முடைச் செல்வமும் உள்ளாள், பொய்ம் மருண்டு, பந்து புடைப்பன்ன பாணிப் பல் அடிச் சில் பரிக் குதிரை, பல் வேல் எழினி |
10 |
கெடல் அருந் துப்பின் விடுதொழில் முடிமார், கனை எரி நடந்த கல் காய் கானத்து வினை வல் அம்பின் விழுத் தொடை மறவர் தேம் பிழி நறுங் கள் மகிழின், முனை கடந்து, வீங்கு மென் சுரைய ஏற்றினம் தரூஉம் |
15 |
முகை தலை திறந்த வேனிற் பகை தலைமணந்த பல் அதர்ச் செலவே? |
மகட் போக்கிய தாய் சொல்லியது. - தாயங்கண்ணனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 105 . பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, தேம், எட்டுத்தொகை, சங்க